அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தோட்டவெளி திருத்தலத்தின் மறைசாட்சிகள் நினைவு விழா....சிறப்பாக இடம்பெற்றது


மன்னார் மறைசாட்சிகள் நினைவு விழா பங்குத்தந்தை அருட்பணி பெனோ அடிகளாரின் தலைமையில் 20-07-2018 கொடியெற்றத்துடன் ஆரம்பமானது திருப்பலியின்போது அருட்தந்தை தேவராஜ் அடிகளார் மற்றும் அருட்தந்தை பிரங்டப் அடிகளாரும் கலந்துகொண்டு மறையுரையாற்றினர்.

 விசுவாசத்தின் மறைசாட்சிகள் திருவிழாவானது 21-07-2018 காலை7.30 மணிக்கு பங்குத்தந்தை வண.பெனோ அடிகளாரின் தலைமையில் ஆரம்பமானது அருட்தந்தை இ.செபமாலை மற்றும் அருட்தந்தை பி.மெரடிகோல் அடிகளார் மற்றும் அருட்சகோதரிகள் அருட்சகோதரர்கள் கலந்துகொண்டு மறைசாட்சிகளின் புனிதர் நிலைக்க்காக செபித்தனர் மேலும் திருப்பலியின் ஆரம்பத்தில் மறைசாட்சிகளின் கல்லறை பங்குத்தந்தையவர்களினால் ஆசிர்வதிக்கப்பட்டது.

திருப்பலியில் பாராளுமன்ற உறுப்பினர்  வடமாகாணசபை சுகாதார அமைச்சர் மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர்
நிகழ்வின்போது கல்வியில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு பரிசு கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் மேலும் கடந்த மூன்று வருடங்களாக மறைசாட்சிகள் சமூகநல அமைப்பின் திரு.சந்தியோகு திரு.தியோகுப்பிள்ளை  திரு.பாஸ்கரன் அவர்கள்  அமைப்பின் ஆய்வாளர் திரு.அந்தோனிபிச்சை அவர்களும்  கவிஞர் மன்னார் பெனிலும் அமைப்பினாரல் கௌரவிக்கப்பட்டனர்.

 தோட்டவெளி திருத்தலத்தின் பங்குத்தந்தை வண.பெனோ அடிகளாருக்கு கௌரவமளிக்கப்பட்டு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டதுடன் பங்குத்தந்தை இ.செபமாலை அடிகளாருக்கும் கௌரவமளிக்கப்பட்டது

மறைசாட்சிகளை புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கான செபத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்தன










மன்னார் தோட்டவெளி திருத்தலத்தின் மறைசாட்சிகள் நினைவு விழா....சிறப்பாக இடம்பெற்றது Reviewed by Author on July 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.