அண்மைய செய்திகள்

recent
-

சிறிய நாடு தான் மூன்றாம் உலகப் போரை உருவாக்கும்: டொனால்டு டிரம்ப்


ஐரோப்பாவில் உள்ள மிகச் சிறிய நாடான மாண்டிநெக்ரோ தான் மூன்றாம் உலகப் போரை உருவாக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
ஐரோப்பிய கண்டத்தில் குரேஷியா, செர்பியா, அல்பேனியா ஆகிய நாடுகளுக்கு இடையில் உள்ள சிறிய நாடு மாண்டிநெக்ரோ. இங்கு 6 லட்சம் மக்கள் மட்டுமே உள்ளனர். இந்த நாடு சமீபத்தில் நேட்டோ குழுவில் 29வது நாடாக இணைந்தது.
நேட்டோ குழு என்பது 29 நாடுகளை கொண்டதாகும். இந்த குழுவில் உள்ள எந்தவொரு நாட்டின் மீதும் வேறு நாடு தாக்குதல் நடத்தினாலோ அல்லது போர் தொடுத்தாலோ, இந்த குழுவில் உள்ள அனைத்து நாடுகளும் இணைந்து, அந்த நாட்டின் மீது போர் தொடுக்கும். இதனால் இந்த குழு மிகவும் வலுவானதாக பார்க்கப்படுகிறது.


REUTERS/STEVO VASILJEVIC

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேட்டி ஒன்றில் கூறுகையில், ‘நேட்டோ படைகள் உலகப் போரை உருவாக்கும் வல்லமை கொண்டவை. அந்த குழுவில் ஒரு நாடு தாக்கப்பட்டால் கூட, மற்ற எல்லா நாடுகளும் சண்டைக்கு செல்லும்.
இதனால் அந்த குழுவில் ஒரு சிறிய நாடு தாக்கப்பட்டால் கூட, மற்ற நாடுகள் போரை உருவாக்கும். மேலும், நேட்டோவில் இருப்பதிலேயே மிகவும் மூர்க்கமான நாடு மாண்டிநெக்ரோ தான். அதில் குறைவான மக்கள் இருந்தாலும், எல்லோரும் மிகவும் மூர்க்கமாக இருக்கிறார்கள்.
இதனால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மூன்றாம் உலகப் போர் உருவாக காரணமாக இருக்கலாம். அந்த நாடு மூன்றாம் உலகப் போரை உருவாக்க வாய்ப்புள்ளது’ என தெரிவித்துள்ளார்.

சிறிய நாடு தான் மூன்றாம் உலகப் போரை உருவாக்கும்: டொனால்டு டிரம்ப் Reviewed by Author on July 23, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.