மன்னார் மனித புதைகுழி- நிர்வாணம் ஆக்கப்பட்டு புதைக்கப்பட்டனரா......மர்மம்-படங்கள்
மன்னார் சதோச வளாகத்தில் தொடர்சியாக சந்தோகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்க்கப்பட்டு வருகின்றது மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகளின் போதும் தொடர்ச்சியாக புதிய மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது இவ்வாறாக புதிய மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றமையினால் அகழ்வு பணிகள் முடிவின்றி தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது இன்றுடன் 62 வது தடவையாக குறித்த வளாகத்தில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றன
விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல்துறை போராசிரியர் தலைமையில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்ற நிலையில்
இதுவரை குறித்த வளாகத்தில் 111 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 97 மனித எச்சங்கள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன மேலதிகமாக காணப்படும் 14 மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள் இன்று இடம் பொறுகின்ற போதும் குறித்த மனித எச்சங்களின் கீழ் மேலும் அதிகளவிலான மனித மண்டையோடுகள் காணப்படுவதனால் அப்புறப்படுத்தும் பணிகளை முழுவதுமாக முடிப்பதில் தாமதம் காணப்படுகின்றது
ஆனாலும் இதுவரை 111 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டலும் 95 மனித எச்சங்கள் மீட்கப்பட்டலும் குறித்த வளாகத்தில் இருந்து மீட்க்கப்பட்ட தடைய பொருட்கள் குறைவாகவே காணப்படுகின்றது
இது வரை வட்டவடிவிலான உலோகப்பொருட்கள் மாலை போன்ற ஒரு சில தடைய பொருட்களே மீட்கப்பட்டுள்ளது இது வரை 4 தொடக்கம் 5 அடி வரை அகழ்வுகள் இடம் பெற்றிருந்தாலும் இது வரை துணிகளே அல்லது ஆடைகளுடன் சம்மந்தப்பட்ட எந்தவிதமான தடைய பொருட்களும் கிடைக்கவில்லை என்பது சந்தோகத்திற்குறியதாக காணப்படுகின்றது
சிலவேளைகளில் ஆடைகள் மண்ணின் தன்மை காரணமாக உக்கிபோயிருக்கலாம் என கொண்டாலும் இதுவரை ஆடைகளில் காணப்படும் பிளாஸ்ரிக் பொத்தான்கள் இரும்பு கொழிக்கிகள் நைலோன் துணிகள் என எதுவும் கிடைக்கவில்லை ஓரு வேளை புதைக்கப்பட்ட உடல்கள் நிர்வாண நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாமோ என சந்தோகம் தோற்றம் பெருகின்றது
எது எவ்வாறே இறுதிகட்ட பரிசோதனையின் பின்னரே உண்மை வெளிவரும் அதுவரை மன்னார் புதை குழி மர்மம் தொடர்ந்து நீடித்து கொண்டே இருக்கும்.
மன்னார் மனித புதைகுழி- நிர்வாணம் ஆக்கப்பட்டு புதைக்கப்பட்டனரா......மர்மம்-படங்கள்
Reviewed by Author
on
September 03, 2018
Rating:

No comments:
Post a Comment