யாரும் கற்பனை செய்யாத ஒருநாள் முதல்வர் உருவான வரலாறு! ஷங்கர்.
தமிழ் சினிமா தாண்டி இந்திய சினிமாவே வியக்கும் பிரமாண்ட படங்களை எடுப்பவர் இயக்குனர் ஷங்கர். இவர் இயக்கியது சில படங்களே என்றாலும் பெரும்பாலும் மறக்கமுடியாத சாதனை படங்கள் தான். அப்படி உருவான படம் தான் முதல்வன். ஒரு நாள் முதல்வராகும் சாமானியன் என்ற புதிய கற்பனையில் உருவாக்கியிருந்தார். இவருக்கு இந்த ஐடியா உருவாக காரணம் என்னவென்றால், ஜீன்ஸ் படத்தின் சூட்டிங்குக்காக இங்கிலாந்து ..
சென்றிருந்தனர்.
அப்போது உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா அங்கு வந்திருப்பதை அறிந்த அங்கிருந்த அரசு அதிகாரிகள் அவரை கௌரவிக்கும் வண்ணம் வரலாற்று சிறப்பு வாய்ந்த பிக்பென் கடிகாரத்தின் சாவியை ஒரு நாளைக்கு கொடுத்தனர். அங்குள்ள வழக்கப்படி அந்த சாவி வைத்திருக்கும் நபர் தான் அந்த நகரத்தின் தலைவர் போல சிறப்பு வாய்ந்த பதவியாகும். இதை பார்த்த ஷங்கருக்கு இதே போல சாதாரண நபர் ஒருநாள் முதல்வராக இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் தான் அந்த கதையை எழுத தொடங்கினாராம். இந்த தகவலை ஷங்கர் சில வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டியில் கூறியிருந்தார்.
மேலும் இதே முதல்வன் படத்தில் வரும் கவனிக்கப்படாத ஒரு வசனம் ஒரு படத்தில் செம டிரெண்டான பாடலாக மாறி ஹிட்டடித்தது. அதை நாளை பார்க்கலாம்.
யாரும் கற்பனை செய்யாத ஒருநாள் முதல்வர் உருவான வரலாறு! ஷங்கர்.
Reviewed by Author
on
September 29, 2018
Rating:

No comments:
Post a Comment