நாடாளுமன்றில் இரா.சம்பந்தன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!
உண்மை மற்றும் நீதி என்பன முன்னிலைப்படுத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் இழப்பீடுகள் விடயத்தில் அவை கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியாக வலுப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இழப்பீடுகள் பற்றிய அலுவலக சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “காணிகள் என்பது ஒரு அடிப்படை பிரச்சினை என்பதனால், விடுவிக்கப்படாத காணிகள் விடுவிக்கப்படுவதற்கு கவனம் செலுத்த வேண்டும்.
பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு வழங்கப்படும் இழப்பீடுகள், அவர்கள் தமது வாழ்க்கையை முன்னோக்கி கொண்டுசெல்லும் வகையில் அமைய வேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தம்மை விடுதலை செய்யுமாறு தடுப்பிலுள்ள கைதிகள் தற்போது உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, குறித்த கைதிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதேவேளை, 1971, 1988, 89ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜே.வி.பியைச் சேர்ந்த பெருமளவானோர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்” எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றில் இரா.சம்பந்தன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!
Reviewed by Author
on
October 11, 2018
Rating:

No comments:
Post a Comment