அண்மைய செய்திகள்

recent
-

100 நாட்களை கடந்தும் முடிவின்றி தொடரும் சதொசா மனித புதைகுழி அகழ்வு பணி


மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது 100 வது நாளாக தொடர்சியாக இடம் பெற்று வருகின்றது தெடர்ச்சியாக மழை பெய்துகொண்டு இருக்கின்ற போதும் மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டும் அப்புறப்படுத்தப்பட்டும் வருகின்றது

மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி T.சரவண ராஜா மேற்ப்பார்வையிலும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையிலும் அகழ்வு பணியானது இடம் பெற்று வருகின்றது

கடந்த வியாழக்கிழமைக்கு பின்னர் இன்று காலை 100வது தடவையாக அகழ்வுப்பணியானது இடம் பெற்றது.
இதுவரையான அகழ்வு பணிகளின் முடிவின் படி 216 க்கு அதிகமான மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 209 அதிகமான மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு பொதி செய்யப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது அத்துடன் அடையாளப்படுத்தப்பட்டு இன்னமும் அப்புறப்படுத்தப்படாத    மேலதிக மனித எச்சங்களை அப்புறப்படும்தும் பணிகள் தோடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது

அத்துடன் குறித்த மனித குழி அகழ்வு பணி தொடர்பான விபரங்களை அறியும் பொருட்டு வலிந்து காணமல் ஆக்கப்பட்டோருக்காக வாதிடும் சட்டத்தரணிகல் அடங்கிய குழு ஒன்று இன்று காலை 10.30 மணியளவில் மனித புதைகுழிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டமை குறிப்பிடதக்கது.







100 நாட்களை கடந்தும் முடிவின்றி தொடரும் சதொசா மனித புதைகுழி அகழ்வு பணி Reviewed by Author on November 05, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.