தமிழக மீனவர்களின் படகு மூழ்கியமைக்கு இலங்கை கடற்படையினரே பொறுப்பு -
நேற்று முன்தினம் கச்சத்தீவு கடற்பரப்பில் வைத்து தமிழக மீனவர்களின் படகு ஒன்று மூழ்கியமைக்கு இலங்கையின் கடற்படையினரே பொறுப்பு என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
இந்திய கடற்பரப்பில் தாம் தொழிலில் ஈடுபட்டிருந்தவேளையில் இலங்கையின் கடற்படையினர் தமது படகுகளை விரட்டியடித்தபோதே அவர்களின் கப்பல் ஒன்றுடன் மோதி இந்திய படகு மூழ்கியதாக இராமேஸ்வர மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த சம்பவம் தொடர்பில் நேற்று தகவல் வெளியிட்டிருந்த இலங்கையின் வெளியுறவு அமைச்சு தமது கப்பலில் மோதுண்ட இந்திய படகு மூழ்கியதாக தெரிவித்திருந்தது.
எனினும் தமது கடற்படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கையின் வெளியுறவு அமைச்சு தகவல் எதனையும் வெளியிடவில்லை.
தமிழக மீனவர்களின் படகு மூழ்கியமைக்கு இலங்கை கடற்படையினரே பொறுப்பு -
Reviewed by Author
on
November 30, 2018
Rating:

No comments:
Post a Comment