இலங்கை கடற்படையினரின் அத்து மீறலை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அறிவிப்பு:-
இலங்கை கடற்படையினரின் அத்துமீறலை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதோடு, இலங்கை கடற்படை மீது தமிழக மெரைன் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நேற்று முன் தினம் புதன் கிழமை இரவு கச்சை தீவு அருகே இலங்கை கடற்படைக் கப்பல் மோதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற நான்கு மீனவர்கள் நடுகடலில் படகு முழ்கியதால் அவர்களை மீட்ட இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை பொலிஸாரும் ஒப்படைத்தனர்.
ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (30) மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது குறித்த 4 மீனவர்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டு படகிலிருந்த நான்கு மீனவர்களையும் சட்ட விரோதமாக கைது செய்து கொண்டு சென்றதற்கு கண்டனம் தெரிவிப்பதுடன், படகுக்கு நிவாரனத்தொகை வழங்கிட கோரியும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதை வழியுறுத்தி நாளை சனிக்கிழமை (1.12.2018) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தை இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் அறிவித்துள்ளது.
இதனிடையே படகின் உரிமையாளர் வேலாயுதம் தனது படகை இந்திய எல்லையில் வைத்து இலங்கை கடற்படை ரோந்து கப்பலால் மோதி முழ்கடித்து படகில் இருந்த நான்கு மீனவர்ளையும்; கைது செய்யுள்ளதால் இலங்கை கடற்படை மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்ததின் பெயரில் மண்டபம் மெரைன் காவல் நிலைத்தில் இலங்கை கடற்படை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
நேற்று முன் தினம் புதன் கிழமை இரவு கச்சை தீவு அருகே இலங்கை கடற்படைக் கப்பல் மோதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற நான்கு மீனவர்கள் நடுகடலில் படகு முழ்கியதால் அவர்களை மீட்ட இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை பொலிஸாரும் ஒப்படைத்தனர்.
ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (30) மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது குறித்த 4 மீனவர்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டு படகிலிருந்த நான்கு மீனவர்களையும் சட்ட விரோதமாக கைது செய்து கொண்டு சென்றதற்கு கண்டனம் தெரிவிப்பதுடன், படகுக்கு நிவாரனத்தொகை வழங்கிட கோரியும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதை வழியுறுத்தி நாளை சனிக்கிழமை (1.12.2018) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தை இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் அறிவித்துள்ளது.
இதனிடையே படகின் உரிமையாளர் வேலாயுதம் தனது படகை இந்திய எல்லையில் வைத்து இலங்கை கடற்படை ரோந்து கப்பலால் மோதி முழ்கடித்து படகில் இருந்த நான்கு மீனவர்ளையும்; கைது செய்யுள்ளதால் இலங்கை கடற்படை மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்ததின் பெயரில் மண்டபம் மெரைன் காவல் நிலைத்தில் இலங்கை கடற்படை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
இலங்கை கடற்படையினரின் அத்து மீறலை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அறிவிப்பு:-
Reviewed by Author
on
December 01, 2018
Rating:

No comments:
Post a Comment