நெருக்கடி நிலையில் நடைபெறும் ஒரே நல்ல விடயம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை -
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் அவர் இந்த கருத்தினை இன்று பதிவு செய்துள்ளார்.
புதிய அரசாங்கம் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமானால் இந்த நெருக்கடி நிலையில் நடைபெறும் ஒரே நல்ல விடயம் அதுவாகத்தான் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் விடுதலை செய்ய திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து அவர் இவ்வாறு தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு முதல் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படக் கூடாது என தடை ஏற்படுத்திக் கொண்டிருந்தவர் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் நலனைக் கருத்திற் கொண்டு தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நெருக்கடி நிலையில் நடைபெறும் ஒரே நல்ல விடயம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை -
Reviewed by Author
on
November 05, 2018
Rating:

No comments:
Post a Comment