மன்னாரில் அம்புலன்ஸ் வண்டியையும் சாரதியையும் தாக்கிய சந்தேக 03 நபர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதபதி சரவணராஜா கட்டளை
மன்னார் பேசாலை பிரதேச வைத்தியசாலை அம்புலன்ஸ் வண்டி சாரதியை கடமைநேரத்தில் தாக்கி அம்புலன்ஸ் வண்டிக்கு சேதம் விளைவித்த மூன்று பேர் கொண்ட குழுவினரை தற்பொழுது பிணையில் விடுவித்தால் அமைதிக்கு பங்கம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து பிணைக்கு பொலிசார் ஆட்சேபனை தெரிவித்ததைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா சந்தேக நபர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
கடந்த 10.01.2019 வியாழக் கிழமை பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களை தீவிர சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற அம்புலன்ஸ் வண்டியானது அங்கு நோயாளர்களை அனுமதித்துவிட்டு இரவு 10 மணியளவில் மீண்டும் பேசாலை வைத்தியசாலையை நோக்கி வந்து கொண்டிருந்துள்ளது.
அச்சமயத்தில் இவ் அம்புலன்ஸ் வண்டியை மூன்று பேர் கொண்ட இளைஞர் குழு முச்சக்கர வண்டியின் மூலம் அம்புலன்ஸ் வண்டியை மன்னார் இரண்டாம் கட்டையிலிருந்து பேசாலை வரைக்கும் துரத்திக் கொண்டு வந்து
வைத்தியசாலைக்கு முன்பாக அம்புலன்ஸ் வண்டி சாரதியையும் தாக்கி
அம்புலன்னஸ் வண்டிக்கும் சேதம் விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டு
மன்னார் நீதிமன்றில் மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில்
ஆஐர்படுத்தப்பட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து இவர்கள் மூவரும் 14 நாட்கள்
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கானது வியாழக்கிழமை (24.01.2019) மீண்டும் மன்னார் மாவட்ட
நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரனைக்கு
எடுக்கப்பட்டபோது பேசாலை பொலிசார் மன்றில் தெரிவிக்கையில் அம்புலன்ஸ்வண்டி சாரதி தாக்கப்பட்டதுடன் பொதுச் சொத்தாகிய அம்புலன்ஸ் வண்டியும் சேதமாக்கியதில் ரூபா இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட தொகை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் சம்பவ நேரம் அந்த இடத்துக்கு பொலிசார் விரைந்திருக்காவிடில்
பாரிய சேதங்களுக்கு வாய்ப்பு காணப்பட்டதாகவும், இவ் செயல் திட்டமிட்டு
மேற்கொள்ளப்பட்ட செயலாக கருதுவதாலும்,
அத்துடன் இவர்களை தற்பொழுது பிணையில் விடுவிப்பதால் அமைதிக்கு பங்கம் ஏற்படும் அபாயம் தோன்றும் வாய்ப்பு இருப்பதாக பொலிசாரால் மன்றில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் மூவரையும்; தொடர்ந்து 07.02.2019 வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பித்தார்.
மன்னாரில் அம்புலன்ஸ் வண்டியையும் சாரதியையும் தாக்கிய சந்தேக 03 நபர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதபதி சரவணராஜா கட்டளை
Reviewed by Author
on
January 25, 2019
Rating:
Reviewed by Author
on
January 25, 2019
Rating:


No comments:
Post a Comment