மன்னார் தரவன்கோட்டை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த 7 அடி நீளமான முதலை-(படம்)
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட தரவன்கோட்டை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றின் வளாகத்தினுள் இன்று09-1-2019 புதன் கிழமை அதிகாலை உள்ளே சென்ற முதலை ஒன்றை குறித்த வீட்டின் உரிமையாளர்கள் பிடித்து கட்டி வைத்துள்ளனர்.
தரவன் கோட்டை கிராமத்தில் உள்ள குறித்த வீட்டு வளாகத்தினுள் பாரிய முதலை ஒன்றை இன்று புதன் கிழமை அதிகாலை கண்ட குறித்த வீட்டின் உரிமையாளர் கிராம மக்களின் உதவியுடன் பிடித்து கைட்டியுள்ளார்.
குறித்த முதலை சுமார் 7 அடி நீளம் கொண்டது என தெரிய வருகின்றது.
-குறித்த வீட்டை சுற்றி குளம் மற்றும் நீர்த்தேக்கம் எவையும் இல்லதா நிலையில்,குறித்த முதலை காட்டில் இருந்து நீரையும், ஆடு,நாய்,கோழி போன்றவற்றை வேட்டையாடும் நோக்கில் காட்டில் இருந்து கிராமத்திற்குள் வந்திருக்கலாம் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த முதலை தொடர்பில் கிராம அலுவலகர் மற்றும் மன்னார் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
தரவன் கோட்டை கிராமத்தில் உள்ள குறித்த வீட்டு வளாகத்தினுள் பாரிய முதலை ஒன்றை இன்று புதன் கிழமை அதிகாலை கண்ட குறித்த வீட்டின் உரிமையாளர் கிராம மக்களின் உதவியுடன் பிடித்து கைட்டியுள்ளார்.
குறித்த முதலை சுமார் 7 அடி நீளம் கொண்டது என தெரிய வருகின்றது.
-குறித்த வீட்டை சுற்றி குளம் மற்றும் நீர்த்தேக்கம் எவையும் இல்லதா நிலையில்,குறித்த முதலை காட்டில் இருந்து நீரையும், ஆடு,நாய்,கோழி போன்றவற்றை வேட்டையாடும் நோக்கில் காட்டில் இருந்து கிராமத்திற்குள் வந்திருக்கலாம் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த முதலை தொடர்பில் கிராம அலுவலகர் மற்றும் மன்னார் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
மன்னார் தரவன்கோட்டை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த 7 அடி நீளமான முதலை-(படம்)
Reviewed by Author
on
January 09, 2019
Rating:

No comments:
Post a Comment