மன்னார் சிலாவத்துறை கிராம மக்களின் காணி விடுவிப்புக்கான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மன்னார் நகர சபையில் தீர்மானம்.
மன்னார் சிலாவத்துறை கிராம மக்களின் காணி விடுவிப்பக்கான சாத்வீக
போராட்டத்துக்கு ஆதரவை நல்கும்படி மன்னார் சமூக பொருளாதார
மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) மன்னார் நகர சபை தலைவர் மற்றும் இதன் உறுப்பினர்களிடம் எழுத்து மூலம் விடுவிக்கப்பட்ட கோரிக்கைக்கு மன்னார் நகர சபை ஆதரவு தெரிவித்து ஆதரவுக்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது..
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள
சிலாவத்துறை கிராம மக்களின் காணிகளை கட்றபடையினர் கைப்பற்றி
வைத்துள்ளமையைத் தொடர்ந்து இவ் கிராம மக்கள் கடந்த 20.02.2019 தொடக்கம் இவ் காணியை விடுவிக்கக்கோரி தொடர் போராட்டம் ஒன்றை நடாத்தி வருகின்றனர்.
ஆனால் இதற்கான தீர்வும் எட்டப்படாத நிலையில் இருப்பதால் இவ் மக்களின்
சாத்வீக போராட்டத்துக்கும் காணி விடுவிப்புக்கும் மன்னார் நகர சபையும்
ஆதரவு வழங்கும்முகமாக தங்களின் கூட்ட அமர்வில்; இதற்கான தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு ஆக்கபூர்வமான ஆதரவை நல்கும்படி மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) மன்னார் நகர சபை தலைவர் மற்றும் இதன் உறுப்பினர்களிடம் எழுத்து மூலம் இவ் வேண்டுகோளை விடுத்திருந்தது.
இதற்கமைய வியாழக் கிழமை (21.03.2019) மன்னார் நகர சபையின் தலைவர் ஞா.அன்ரனி டேவிட்சன் தலைமையில் நடைபெற்ற மன்னார் நகர சபையின் மாந்தாக் கூட்டத்தில் இதற்கான பிரேரனை கொண்டு வரப்பட்டு காணி விடுவிப்புக்கோரியும் இவர்களின் சாத்வீக போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
சிலாவத்துறை மக்களின் காணி விடுவிப்புக்கான போராட்டத்துக்கு ஆதரவு
தெரிவித்து ஏற்கனவே மன்னார் பிரதேச சபையும், முசலி பிரதேச சபையும்
தீர்மானம் எடுத்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
போராட்டத்துக்கு ஆதரவை நல்கும்படி மன்னார் சமூக பொருளாதார
மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) மன்னார் நகர சபை தலைவர் மற்றும் இதன் உறுப்பினர்களிடம் எழுத்து மூலம் விடுவிக்கப்பட்ட கோரிக்கைக்கு மன்னார் நகர சபை ஆதரவு தெரிவித்து ஆதரவுக்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது..
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள
சிலாவத்துறை கிராம மக்களின் காணிகளை கட்றபடையினர் கைப்பற்றி
வைத்துள்ளமையைத் தொடர்ந்து இவ் கிராம மக்கள் கடந்த 20.02.2019 தொடக்கம் இவ் காணியை விடுவிக்கக்கோரி தொடர் போராட்டம் ஒன்றை நடாத்தி வருகின்றனர்.
ஆனால் இதற்கான தீர்வும் எட்டப்படாத நிலையில் இருப்பதால் இவ் மக்களின்
சாத்வீக போராட்டத்துக்கும் காணி விடுவிப்புக்கும் மன்னார் நகர சபையும்
ஆதரவு வழங்கும்முகமாக தங்களின் கூட்ட அமர்வில்; இதற்கான தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு ஆக்கபூர்வமான ஆதரவை நல்கும்படி மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) மன்னார் நகர சபை தலைவர் மற்றும் இதன் உறுப்பினர்களிடம் எழுத்து மூலம் இவ் வேண்டுகோளை விடுத்திருந்தது.
இதற்கமைய வியாழக் கிழமை (21.03.2019) மன்னார் நகர சபையின் தலைவர் ஞா.அன்ரனி டேவிட்சன் தலைமையில் நடைபெற்ற மன்னார் நகர சபையின் மாந்தாக் கூட்டத்தில் இதற்கான பிரேரனை கொண்டு வரப்பட்டு காணி விடுவிப்புக்கோரியும் இவர்களின் சாத்வீக போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
சிலாவத்துறை மக்களின் காணி விடுவிப்புக்கான போராட்டத்துக்கு ஆதரவு
தெரிவித்து ஏற்கனவே மன்னார் பிரதேச சபையும், முசலி பிரதேச சபையும்
தீர்மானம் எடுத்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மன்னார் சிலாவத்துறை கிராம மக்களின் காணி விடுவிப்புக்கான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மன்னார் நகர சபையில் தீர்மானம்.
Reviewed by Author
on
March 21, 2019
Rating:

No comments:
Post a Comment