சிலாவத்துறையில் காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை அமைச்சர் ரிஸாட் பதியுதீன் நேரடியாக சென்று சந்திப்பு-
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி தமது காணிகளை வழங்கக் கோரி பாதீக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக 15 ஆவது நாளாக புதன் கிழமை (6) தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில்,அமைச்சர் றிஸாட் பதியுதீன் அங்கு சென்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்து உரையாடியுள்ளார்.
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி தமது காணிகளை வழங்கக் கோரி பாதீக்கப்பட்ட மக்கள் கடந்த மாதம் 20 ஆம் திகதி மாலை முதல் தொடர் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
நாட்டில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறை கிராமத்தில் இருந்து 1990 ஆம் ஆண்டு 250 குடும்பங்கள் இடம் பெயர்ந்து கற்பிட்டி உள்ளடங்களாக வேறு இடங்களுக்குச் சென்றனர்.
இந்த நிலையில் யுத்தம் நிறைவடைந்த நிலையில் இடம் பெயர்ந்தவர்கள் 625 குடும்பங்களாக தமது சொந்த இடமான சிலாவத்துறைக்கு மீண்டும் 2009 ஆம் ஆண்டு ஓக்ஸட் மாதம் வந்தனர்.
மீண்டும் சொந்த இடங்களுக்கு வந்த மக்கள் முசலியில் பல்வேறு இடங்களில் குடியேற்றப்பட்டனர்.எனினும் 218 குடும்பங்களுக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலப்பரப்பை கடற்படையினர் சுவீகரித்துள்ளதோடு,கடற்படை முகாமும் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த காணியை விடுவித்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்த போதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பாதீக்கப்பட்ட மக்கள் கடந்த மாதம் 20 ஆம் திகதி சிலாவத்துறை கடற்படை முகாமுக்கு முன்னர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
தொடர்ச்சியாக தற்காலிக கூடாரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இன்று புதன் கிழமை 15 ஆவது நாளாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரகின்றது.
இந்த நிலைமையில் அமைச்சர் றிஸாட் பதியுதீன் இன்று புதன் கிழமை காலை சிலாவத்துறைக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுடன் கலந்துரையாடியதோடு, உரிய விடையங்களை நேரடியாக கேட்டறிந்து கொண்டார்.
இதன் போது பாதீக்கப்பட்ட மக்கள் சார்பாக அமைச்சரிடம் கோரிக்கை அடங்கிய மகஜரும் கையளயிக்கப்பட்டது.அமைச்சருடன் மன்னார்,முசலி பிரதேச சபைகளின் தவிசாளர்கள், அமைச்சரின் இணைப்பாளர் என்.எம்.முனவ்பர்,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அலிக்கான் ஸரீப் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டிருந்தனர்.
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி தமது காணிகளை வழங்கக் கோரி பாதீக்கப்பட்ட மக்கள் கடந்த மாதம் 20 ஆம் திகதி மாலை முதல் தொடர் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
நாட்டில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறை கிராமத்தில் இருந்து 1990 ஆம் ஆண்டு 250 குடும்பங்கள் இடம் பெயர்ந்து கற்பிட்டி உள்ளடங்களாக வேறு இடங்களுக்குச் சென்றனர்.
இந்த நிலையில் யுத்தம் நிறைவடைந்த நிலையில் இடம் பெயர்ந்தவர்கள் 625 குடும்பங்களாக தமது சொந்த இடமான சிலாவத்துறைக்கு மீண்டும் 2009 ஆம் ஆண்டு ஓக்ஸட் மாதம் வந்தனர்.
மீண்டும் சொந்த இடங்களுக்கு வந்த மக்கள் முசலியில் பல்வேறு இடங்களில் குடியேற்றப்பட்டனர்.எனினும் 218 குடும்பங்களுக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலப்பரப்பை கடற்படையினர் சுவீகரித்துள்ளதோடு,கடற்படை முகாமும் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த காணியை விடுவித்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்த போதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பாதீக்கப்பட்ட மக்கள் கடந்த மாதம் 20 ஆம் திகதி சிலாவத்துறை கடற்படை முகாமுக்கு முன்னர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
தொடர்ச்சியாக தற்காலிக கூடாரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இன்று புதன் கிழமை 15 ஆவது நாளாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரகின்றது.
இந்த நிலைமையில் அமைச்சர் றிஸாட் பதியுதீன் இன்று புதன் கிழமை காலை சிலாவத்துறைக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுடன் கலந்துரையாடியதோடு, உரிய விடையங்களை நேரடியாக கேட்டறிந்து கொண்டார்.
இதன் போது பாதீக்கப்பட்ட மக்கள் சார்பாக அமைச்சரிடம் கோரிக்கை அடங்கிய மகஜரும் கையளயிக்கப்பட்டது.அமைச்சருடன் மன்னார்,முசலி பிரதேச சபைகளின் தவிசாளர்கள், அமைச்சரின் இணைப்பாளர் என்.எம்.முனவ்பர்,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அலிக்கான் ஸரீப் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டிருந்தனர்.

சிலாவத்துறையில் காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை அமைச்சர் ரிஸாட் பதியுதீன் நேரடியாக சென்று சந்திப்பு-
Reviewed by Author
on
March 07, 2019
Rating:

No comments:
Post a Comment