அண்மைய செய்திகள்

recent
-

மன்/பரிகாரிகண்டல் அ.த.க.பாடசாலை மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு-படங்கள்

மன்னார் பரிகாரிகண்டல் அ.த.க.பாடசாலையில் 2018 சாதாரணதரத்தில் 9A சித்தி மற்றும் திறமையான பெறுபேறுகள் பெற்று சித்தியடைந்த மணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு  பாடசாலை அதிபர் தலைமையில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் கடந்த வருடம் இடம்பெற்ற சாதாரணதர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவ மாணவிகளுக்கான பரிசீல்கள் மற்றும் கெளரவிப்புக்களும் வழங்கப்பட்டது

அந்த வகையில் முதலாம் இடம் பெற்ற மாணவிக்கு நினைவுச் சின்னமும் பத்தாயிரம் ரூபா பணமும், ஒரு துவிச்சக்கர வண்டியும் வழங்கப்பட்டது.

இரண்டாம் இடம் பெற்ற மாணவனுக்கு நினைவுச் சின்னமும், ஏழாயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.மேலும் சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் பரிசில்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

நிகழ்வில் மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் ஜே.பிரட்லி, நானாட்டான் பிரதேச செயலாளர் மா.சிறிஸ்கந்தகுமார், நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் தி.பரஞ்சோதி தி, அருட்சகோதரர்கள், பங்குத்தந்தையர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.





மன்/பரிகாரிகண்டல் அ.த.க.பாடசாலை மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு-படங்கள் Reviewed by Author on April 04, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.