அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பில் இரவோடு இரவாக தாயார் கைது! தற்கொலைதாரி அடையாளம் காணப்பட்டார் -


மட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்தியவர் புதிய காத்தான்குடியைச் சேர்ந்த முகமது நாசார் முகமது ஆசாத் அல்லது றில்வான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் தாயார் அவரை அடையாளம் காட்டியுள்ளதாகவும், இந்நிலையில், தாயாரை இன்று இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் தொடர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இன்று இரவு புதிய காத்தான்குடி 4ம் குறுக்கு ஒழுங்கையிலுள்ள றில்வானின் தாயாரின் வீட்டை குற்றப் புலனாய்வு பிரிவினர் முற்றுகையிட்டு அவரிடம் தற்கொலை குண்டு தாரியின் புகைப்படத்தை காட்டியுள்ளனர்.

இதன்போது அவருடைய மகன் என அடையாளம் காட்டியுள்ளார். இதனையடுத்து தாயார் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் இரவோடு இரவாக தாயார் கைது! தற்கொலைதாரி அடையாளம் காணப்பட்டார் - Reviewed by Author on April 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.