மன்னார் ஜக்கிய மதங்கள் ஒன்றினைப்பின் ரமழான் தினம்...
"இலங்கையர் எமது இயல்பான சகோதரத்துவத்தை எங்கு இனங்கண்டாலும் அதனை மதிப்போம்"
சிறுவர் கல்வி மற்றும் சிறுவர் பாதுகாப்புக்கான ஜக்கிய மதங்கள் முயற்சி என்னும் கருப்பொருளில் இயங்கும் மன்னார் ஜக்கிய மதங்கள் ஒன்றினைப்பின் தலைவர் வண. மகா தர்மகுமாரக் குருக்கள் அவர்களின் தலைமையில் சர்வோதய மாவட்ட இணைப்பாளர் சீ.யுகேந்திரா ஒழுங்கமைப்பில் மெத்தா மற்றும் ரமழான் தினம் மன்னார் சர்வோதய மண்டபத்தில் URI இனால் ஒழுங்குபடுத்தப்பட்டது.
மன்னார் மாவட்ட சர்வமதத்தலைவர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஜக்கிய மதங்கள் ஒன்றினைப்பின் உறுப்பினர்கள்(URI ), கலந்து கொண்டிருந்தனர்.
பல மதங்களில் காணப்படும் தியான முறைகள் மற்றும் வழிபாட்டு முறைகள் தொடர்பாக அனுபவப் பகிர்வினை மேற்கொண்டனர். கருனை செய்தல் என்ற விடயம் தொடர்பாக தத்தமது மதங்களில் கூறப்பட்டவிடயங்களினை ஏனையவர்களுக்கு தெரியப்படுத்தும் செயற்பாடுகளும் இடம்பெற்றது. மதித்தல் மரியாதை செய்தல் என்ற விடயம் தொடர்பாக பல் மதத்தவர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
கல்விச்செயற்பாடுகள் பற்றியும் ஆராயப்பட்டது.

மன்னார் ஜக்கிய மதங்கள் ஒன்றினைப்பின் ரமழான் தினம்...
Reviewed by Author
on
June 05, 2019
Rating:

No comments:
Post a Comment