அஜித் செய்த பிரம்மிப்பான செயல்!
அஜித் சினிமாவில் இன்று உச்சத்தில் இருக்கிறார். புகழ் அவருக்கு மலை போல குவிந்திருக்கிறது. அவரோ அடக்கமான நபராக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
அவர் பலருக்கும் உதவிகள் செய்து வருவது யாராவது வெளியில் சொன்னால் மட்டுமே தெரியும். உடன் இருப்பவர்களின் தேவையை உணர்ந்து அவர் முன்கூட்டியே செய்துவிடுவார்.
இந்நிலையில் அவரின் ஜும் மாஸ்டர் சிவா தன் அம்மா நகைகளை அடகுவைத்து, வங்கியில் லோன் போட்டும் சொந்தமாக சிங்கிள் பெட்ரூம் ஃபிளாட் ஒன்றை வாங்கியிருந்தாராம்.
ஃபிளாட் வாங்கிய விசயத்தை சொன்ன போது அஜித் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததோடு உடனடியாக சிவாவுக்கு ரூ 5 லட்சத்திற்கான செக்கை கையில் கொடுத்து அம்மாவின் நகைகளை மீட்டு கொடுத்து விடு என கூறிவிட்டாராம்.
மேலும் 5 லட்சத்திற்கான வங்கி வரிக்காக ரூ 10 ஆயிரத்தையும் சேர்த்து கொடுத்து இது உன் சம்பளம் அல்ல என கூறியுள்ளார். அப்போது அஜித் சாரின் கண்ணில் சந்தோசம் தெரிந்தது.
நீங்க நல்ல வருவீங்க என கூறி அஜித் வாழ்த்தியதாக சிவா கூறியுள்ளார்.
அஜித் செய்த பிரம்மிப்பான செயல்!
Reviewed by Author
on
July 15, 2019
Rating:

No comments:
Post a Comment