மன்னார்-பேசாலையில் புதிய சிவில் அமைப்பு உறுப்பினர்கள் தெரிவு-
மன்னார்-பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள சிவில் அமைப்பு பிரதி நிதிகளுக்கும்,பேசாலை பொலிஸாருக்கும் இடையில் நேற்று 20072019 சனிக்கிழமை மாலை பேசாலை பொலிஸ் நிலையத்தில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.
பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தமித்த சோமஜித் தலைமையில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலின் போது பேசாலை கிராமத்தில் உள்ள ஒவ்வெரு கிராம அலுவலகர் பிரிவுக்குமான புதிய சிவில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
இதன் போது புதிய நடைமுறைகள் தொடர்பாக போக்குவரத்து பிரிவு பொலிஸார் மக்களுக்கு தெழிவூட்டல்களையும் வழங்கியுள்ளனர்.
குறித்த கலந்துரையாடல்களை தொடர்ந்து சிவில் அமைப்புக்களின் புதிய நிர்வாக தெரிவும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னார்-பேசாலையில் புதிய சிவில் அமைப்பு உறுப்பினர்கள் தெரிவு-
Reviewed by Author
on
July 21, 2019
Rating:

No comments:
Post a Comment