அண்மைய செய்திகள்

recent
-

ஓய்வு பெற்ற மடு வலய விஞ்ஞான உதவிக் கல்வி பணிப்பாளருக்கு சேவை நலன் பாராட்டு-படம்

மடு வலயக் கல்வி பணிமனையில் கடந்த 15 வருடங்களாக விஞ்ஞான உதவிக் கல்வி பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வு பெற்ற மன்னார் வங்காலையைச் சேர்ந்த திருமதி வி.சூசை நாயகம் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று 14.10.2019திங்கட்கிழமை மதியம் அடம்பன் ம.வி பாடசாலையில் இடம் பெற்றது.

மடு வலய விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற மணி விழா நிகழ்வின் போது சுமார் 35 வருடங்கள் அரச சேவையில் கடமையாற்றி, சுமார் 15 வருடங்கள் மடு வலயக்கல்வி பணிமனையில்   விஞ்ஞான உதவிக் கல்வி பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வு பெற்ற  திருமதி வி.சூசை நாயகம் அவர்களின் சேவை நலநன பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

-நாட்டில் இடம் பெற்ற உள் நாட்டு யுத்தத்தின் போது மடு வலயக்கல்வி பணிமனையில்   விஞ்ஞான உதவிக் கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய  திருமதி வி.சூசை நாயகம் அவர்கள் கல்விக்காக பல்வேறு சேவைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

ஓய்வு பெற்ற மடு வலய விஞ்ஞான உதவிக் கல்வி பணிப்பாளருக்கு சேவை நலன் பாராட்டு-படம் Reviewed by Author on October 15, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.