அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் கடற்பரப்பில் மிதந்த ஒரு தொகை கேரள கஞ்சாப் பொதிகள் கடற்படையினரால் மீட்பு-படம்

தலைமன்னார் கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த ஒரு தொகை கேரள கஞ்சாப் பொதிகளை  கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை மாலை மீட்டுள்ளனர்.

தலைமன்னார் கடற்பரப்பில்  மிதந்து கொண்டிருந்த சந்தேகத்திற் கிடமான 2 பொதிளை கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் அவதானித்துள்ளனர்.

-குறித்த இரண்டு பொதிகளையும் மீட்ட கடற்படையினர் அதனை சோதனைக்கு உற்படுத்திய போது கேரள கஞ்சா காணப்பட்டமை தெரிய வந்தது. மீட்கப்பட்ட கஞ்சா சுமார் 86 கிலோ 520   கிராம் என கடற்படை தெரிவித்துள்ளது.

தலைமன்னார் கடலில் கடற்படையினரின் ரோந்து  நடவடிக்கைகளின் காரணமாக சந்தேக நபர்கள் கேரள கஞ்சா பொதிகளை கடலில் போட்டு விட்டு தப்பித்திருக்க முடியும் என கடற்படை தெரிவித்துள்ளது.

 மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மேலதிக விசாரணைக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.






தலைமன்னார் கடற்பரப்பில் மிதந்த ஒரு தொகை கேரள கஞ்சாப் பொதிகள் கடற்படையினரால் மீட்பு-படம் Reviewed by Author on October 15, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.