பூமியை கண்காணிக்க புதிய செயற்கைகோள் - விண்ணில் நிலைநிறுத்தியது இஸ்ரோ!
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, கார்டோசாட்-3 என்ற செயற்கைக்கோளை தயாரித்தது. இந்த செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 13 நானோ வகை செயற்கைகோள்கள் இன்று பி.எஸ்.எல்.வி. சி-47 ரொக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
திட்டமிடப்பட்ட சரியான நேர்கோட்டில் பயணித்த பிஎஸ்எல்வி சி47 ரொக்கெட் பூமியின் சுற்றுவட்டப்பாதையை அடைந்ததும் கார்டோசாட் 3 செயற்கைகோள் தனியாக பிரிக்கப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
அதனுடன் அனுப்பபட்ட நானோ செயற்கைகோள் ஒன்றன்பின் ஒன்றாக நிலைநிறுத்தப்பட்டது.
அதன்பின்னர் இந்த திட்டத்தின் வெற்றி குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் உரையாற்றினார்.
பூமியை கண்காணிக்க புதிய செயற்கைகோள் - விண்ணில் நிலைநிறுத்தியது இஸ்ரோ!
Reviewed by Author
on
November 27, 2019
Rating:

No comments:
Post a Comment