அண்மைய செய்திகள்

recent
-

அவுஸ்திரேலியா செல்லும் அகதிகளை regional பகுதிகளில் குடியேற்ற திட்டம்!

அவுஸ்திரேலியாவுக்குள் மனிதாபிமான அடிப்படையில் உள்வாங்கப்படும் அகதிகளில் அரைவாசிப்பேரை, நகரங்கள் அல்லாத regional பகுதிகளில் குடியேற்றுவதற்கு அரசு திட்டமிடுவதாக, அந்நாட்டு குடிவரவு அமைச்சர் David Coleman தெரிவித்துள்ளார்.

இது குறித்து அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஆண்டொன்றுக்கு சுமார் 18,750 அகதிகள் மனிதாபிமான அடிப்படையில் அவுஸ்திரேலியாவில் குடியமர்வதற்கு அனுமதிக்கப்படும் நிலையில், 2022ம் ஆண்டில் இவர்களில் 50 வீதமானோரை மெல்பேர்ன், சிட்னி, பிரிஸ்பேர்ன் ஆகிய நகரங்களுக்கு வெளியே குடியமர்த்த திட்டமிடப்படுகிறது.

அதேநேரம் regional பகுதிகளில் குடியேற்றப்படும் அகதிகளின் எண்ணிக்கை, 2019-20 இல் 40 வீதமாக காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறு regional பகுதிகளில் குடியமர்த்தப்படும் அகதிகள் நிதி ரீதியாக உறுதியான நிலையை எட்டும்வரை அவர்களுக்குத் தேவையான உதவிகள் அவுஸ்திரேலிய அரசினால் வழங்கப்படுவதுடன் ஆங்கில கல்வியும் இலவசமாக வழங்கப்படும்.

அகதிகளுக்கான வேலைவாய்ப்பு மற்றும் குடியமர்த்தல் குறித்த மதிப்பாய்வு பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
நாட்டில் புதிதாக குடியேறும் மக்களை, regional பகுதிகளில் குடியமர்த்த அரசு எடுக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்று அமைச்சர் David Coleman கூறினார்.


அவுஸ்திரேலியா செல்லும் அகதிகளை regional பகுதிகளில் குடியேற்ற திட்டம்! Reviewed by Author on November 24, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.