மன்னாரிலும் தெண்பட்டது கங்கண சூரிய கிரகணம்....
சுமார் 10 வருடங்களின் பின்னர், வியாழக்கிழமை 26/12/2019 இலங்கையில் பல்வேறு மாவட்டங்களில் 'கங்கண சூரிய கிரகணம்' ஏற்பட்டது. வியாழக்கிழமை (26) காலை 8.09 மணியிலிருந்து முற்பகல் 11.21 வரை இந்த சூரிய கிரகணம் ஏற்பட்டது.
குறித்த சூரிய கிரகணம் மன்னார் மாவட்டத்திலும் ஏற்பட்டது.
குறித்த சூரிய கிரகணத்தை பொது மக்கள் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஆய்வுகளை மன்னாரில் வானியலாராய்ச்சி திணைக்களத்தின் ஆதர் சி கிளாக் நிறுவனம் மேற்கொண்டது.
-மன்னாரில் தனியார் விடுதி ஒன்றின் பார்வையாளர் அரங்கில் குறித்த அய்வுகள் இடம் பெற்றது.
-இதன் போது பல பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளடங்களாக நூற்றுக் கணக்கானவர்கள் குறித்த சூரிய கிரகணத்தை பாதுகாப்பான முறையில் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரிலும் தெண்பட்டது கங்கண சூரிய கிரகணம்....
Reviewed by Author
on
December 27, 2019
Rating:

No comments:
Post a Comment