43 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பம்! விலகிக் கொள்வதாக இலங்கை பகிரங்க அறிவிப்பு -
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது அமர்வு ஜெனிவாவில் கடந்த 24ஆம் திகதி ஆரம்பமாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இலங்கை தனது முடிவை அறிவித்துள்ளது.
இந்த அமர்வில் கலந்து கொள்ளச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தனது விசேட உரையின் மூலம் இலங்கையின் முடிவை ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவித்தார். குறித்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் செயற்படுத்தப்பட முடியாது, மேலும் மக்களின் இறையாண்மையை மீறும் செயற்பாடு என தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் அனைத்து ஜனநாயக நடைமுறைகளையும் மீறியது, குறிப்பாக அமைச்சரவை அங்கீராம் வழங்கப்படவில்லை, நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை, முன்னாள் ஜனாதிபதியிடமும் இந்த விடயம் ஆலோசிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே கடந்த அரசாங்கத்தினால் இணை அனுசரணை வழங்கப்பட்ட தீர்மானம் 40/1 மற்றும் 30/1 மற்றும் 34/1 இல் இருந்து முறையாக விலக நாம் தீர்மானித்துள்ளோம் இது நடைமுறைக்கு சாத்தியமற்றது, அரசியலமைப்பிற்கு விரோதமானது என அவர் தொடர்ந்தும் சுட்டிக்காட்டினார்.
43 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பம்! விலகிக் கொள்வதாக இலங்கை பகிரங்க அறிவிப்பு -
Reviewed by Author
on
February 26, 2020
Rating:

No comments:
Post a Comment