அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரிமீயர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் 20 ஆம் நாள் சுற்று-SLF உதை பந்தாட்ட கழகம் வெற்றி

மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட மன்னார் பிரிமீயர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் 20 ஆம் நாள் சுற்று போட்டி     நேற்று திங்கட்கிழமை 09-03-2020 இரவு 7.45 மணியளவில் மின் ஒளியில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

'மன்னார் பிரிமீயர் லீக்' தலைவரும், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவரும், மன்னார் நகர முதல்வருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில்  குறித்த போட்டி இடம் பெற்றது.

குறித்த உதை பந்தாட்ட போட்டியானது அயலன்ட் உதை பந்தாட்ட கழகத்திற்கும்   எஸ்.எல்.எப்.  உதைபந்தாட்ட கழகத்திற்கு இடையில் இடம் பெற்றது.

இதன் போது எஸ்.எல்.எப்.  உதை பந்தாட்ட கழக வீரர் ஜேம்ஸ் எடிசன் பிகிராடோ ஒரு கோலை அடித்தார்.

நீண்ட நேரம் போட்டி இடம் பெற்ற போதும் வேறு எந்த கோல்களும் அடிக்கப்படவில்லை.

-இந்த நிலையில் எஸ்.எல்.எப்.உதைபந்தாட்ட கழகம் 1:0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

மன்னார் பிரிமீயர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் 20 ஆம் நாள் சுற்று-SLF உதை பந்தாட்ட கழகம் வெற்றி Reviewed by Author on March 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.