அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரிமீயர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் 25 ஆம் நாள் சுற்று -போட்டி சம நிலையில் முடிவடைந்தது.

மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட மன்னார் பிரிமீயர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் 25 ஆம் நாள் சுற்று போட்டி  ஞாயிற்றுக்கிழமை6-03-2020 இரவு 7.45 மணியளவில் மின் ஒளியில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

'மன்னார் பிரிமீயர் லீக்' தலைவரும், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவரும், மன்னார் நகர முதல்வருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில்  குறித்த போட்டி இடம் பெற்றது.

குறித்த உதை பந்தாட்ட போட்டியானது பள்ளிமுனை உதைபந்தாட்ட கழகத்திற்கும்,எஸ்.எல்.எப் உதைபந்தாட்ட கழகத்திற்கும் இடையில் இடம் பெற்றது.

இதன் போது பள்ளிமுனை உதைபந்தாட்ட கழக வீரர் நிதுஸன் ஒரு கோலையும், எஸ்.எல்.எப் உதை பந்தாட்ட கழக வீரர் எடிசன் ஒரு கோலையும் அடித்தனர்.

-இரு அணிகளும் கடுமையாக மோதிய போதும் 1:1 என்ற கணக்கில் போட்டி சம நிலையில் முடிவடைந்தது.

மன்னார் பிரிமீயர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் 25 ஆம் நாள் சுற்று -போட்டி சம நிலையில் முடிவடைந்தது. Reviewed by Author on March 17, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.