மன்னார் பிரதான வீதியை மறித்து போராட்டம்-கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கும் நபர்களை மன்னாரிற்கு கொண்டு வர மக்கள் எதிர்ப்பு(PHOTOS,VIDEO)
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களை தனிமை படுத்துவதற்கு மன்னார் மாவட்டத்திற்கு அழைத்து வருவதாக பரவிய தகவலின் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில்; வடக்கு கிழக்கு பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வருவதற்கு மன்னார் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை15-03-2020 மாலை 5 மணியளவில் மன்னார் பஸார் பகுதியில் பிரதான வீதியை மறித்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டத்தின் போது மன்னார் மாவட்டம் , வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளை குறிவைத்து அரசாங்கம் தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும் , அதிகமான இடங்கள் மக்கள் நடமாட்டம் அற்ற பகுதிகளாக காணப்படுகின்ற போதும் மன்னார் பகுதியில் குறித்த கொரோன நோயால் பாதிக்கப்பட்டவர்களை அனுமதிக்க கூடாது எனவும் ,அவர்களை மக்கள் நடமாட்டம் இல்லாத பாதுகாப்பான பகுதிகளில் வைத்து அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவ வழங்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
மன்னார் மாவட்டத்தில் தீவக பகுதிகளில் அதிகம் மக்கள் வாழ்வதாகவும் இங்குள்ள மக்களின் நோய்களுக்கு சிகிச்சை அழிக்கவே ஒழுங்கான மருத்துவர்கள் இல்லாத நிலையில் இவ்வாறான பாதிப்புக்கு உள்ளானவர்களை அழைத்து வருவது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் செயலாக உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இதை மீறி பாதிக்கப்பட்டவர்களை மன்னார் மாவட்டத்திற்குள் கொண்டு வரும் பட்சத்தில் தாங்கள் பேரூந்துகளை மறித்து போராட்டம் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் குறித்த பகுதிக்கு வருகை தந்த பிராந்திய பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்களுடன் உரையாடி அவ்வாறான செயற்பாடுகள் இடம் பெறாமல் தடுப்பதாகவும் அவை உறுதிப்படுத்தப்படாத செய்திகள்.
எனவே பொலிஸார் இவ்விடையம் தொடர்பாக கவனம் செலுத்துவதாக தெரிவித்ததை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டுச் சென்றனர்.
குறித்த போராட்டத்தின் போது மன்னார் மாவட்டம் , வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளை குறிவைத்து அரசாங்கம் தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும் , அதிகமான இடங்கள் மக்கள் நடமாட்டம் அற்ற பகுதிகளாக காணப்படுகின்ற போதும் மன்னார் பகுதியில் குறித்த கொரோன நோயால் பாதிக்கப்பட்டவர்களை அனுமதிக்க கூடாது எனவும் ,அவர்களை மக்கள் நடமாட்டம் இல்லாத பாதுகாப்பான பகுதிகளில் வைத்து அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவ வழங்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
மன்னார் மாவட்டத்தில் தீவக பகுதிகளில் அதிகம் மக்கள் வாழ்வதாகவும் இங்குள்ள மக்களின் நோய்களுக்கு சிகிச்சை அழிக்கவே ஒழுங்கான மருத்துவர்கள் இல்லாத நிலையில் இவ்வாறான பாதிப்புக்கு உள்ளானவர்களை அழைத்து வருவது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் செயலாக உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இதை மீறி பாதிக்கப்பட்டவர்களை மன்னார் மாவட்டத்திற்குள் கொண்டு வரும் பட்சத்தில் தாங்கள் பேரூந்துகளை மறித்து போராட்டம் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் குறித்த பகுதிக்கு வருகை தந்த பிராந்திய பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்களுடன் உரையாடி அவ்வாறான செயற்பாடுகள் இடம் பெறாமல் தடுப்பதாகவும் அவை உறுதிப்படுத்தப்படாத செய்திகள்.
எனவே பொலிஸார் இவ்விடையம் தொடர்பாக கவனம் செலுத்துவதாக தெரிவித்ததை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டுச் சென்றனர்.
மன்னார் பிரதான வீதியை மறித்து போராட்டம்-கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கும் நபர்களை மன்னாரிற்கு கொண்டு வர மக்கள் எதிர்ப்பு(PHOTOS,VIDEO)
Reviewed by Author
on
March 16, 2020
Rating:

No comments:
Post a Comment