குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 465 பேரில் 313 பேருக்கு கொரோனா தொற்று
இலங்கையில் ஒரே நாளில் அதிகளவிலான COVID-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாளாக நேற்றைய தினம் (27) பதிவானது.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்களில் 97 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.
பெரும்பாலானவர்கள் குவைத்திலிருந்து வந்தவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 20 ஆம் திகதி குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 465 பேரில் 313 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை இன்று மாலை உறுதி செய்யப்பட்டது.
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கு தொற்று அதிகம் காணப்படுவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதன் காரணமாக சமூகத்தில் COVID-19 தொற்று பரவுவதற்கான சந்தர்ப்பம் தடைப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இந்நோய் சமூகத்தில் பரவும் அபாயம் 100 வீதம் தணியவில்லை என சுதத் சமரவீர சுட்டிக்காட்டினார்.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்களில் 97 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.
பெரும்பாலானவர்கள் குவைத்திலிருந்து வந்தவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 20 ஆம் திகதி குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 465 பேரில் 313 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை இன்று மாலை உறுதி செய்யப்பட்டது.
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கு தொற்று அதிகம் காணப்படுவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதன் காரணமாக சமூகத்தில் COVID-19 தொற்று பரவுவதற்கான சந்தர்ப்பம் தடைப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இந்நோய் சமூகத்தில் பரவும் அபாயம் 100 வீதம் தணியவில்லை என சுதத் சமரவீர சுட்டிக்காட்டினார்.
குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 465 பேரில் 313 பேருக்கு கொரோனா தொற்று
Reviewed by Admin
on
May 28, 2020
Rating:

No comments:
Post a Comment