வெளிநாட்டு வேலைவாய்ப்பு வீசா வழங்கப்பட நடவடிக்கை...
கொவிட் 19 தொற்றின் பின்னர் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் வெளிநாட்டு தொழிலாளர்களை தொழில் இணைத்து கொள்ளும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் மலேசியா வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வீசா வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை தெரிவித்துள்ளது. இவ்வாண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியின் பின்னர் மலேசிய அரசாங்கத்தால் இவ்வாறு வீசா வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மலேசியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
வெளிநாட்டு வேலைவாய்ப்பு வீசா வழங்கப்பட நடவடிக்கை...
Reviewed by Author
on
August 13, 2020
Rating:

No comments:
Post a Comment