அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பெரிய கரிசல் பகுதியில் வாகனத்தில் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் 1024 கிலோ மஞ்சள் கட்டி மூடைகள் மீட்பு.

பேசாலை விசேட புலனாய்வுத்துறைக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் பேரில் மன்னார் பிரதேசச் செயலகப் பிரிவில் உள்ள பெரிய கரிசல் பகுதியில் மகேந்திரா ரக வாகனம் ஒன்றில் ஒரு தொகுதி மஞ்சல் கட்டி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் நேற்று (26) சனிக்கிழமை மாலை பேசாலை பொலிஸார் கைப்பற்றி உள்ளனர்.

 சுமார் 1024 கி லோ 200 கிராம் மஞ்சள் மூடைகள் இவ்வாறு பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் யாரும் இல்லாத நிலையில் பெரிய கரிசல் பகுதியில் லொறி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கைப்பற்றப்பட்ட மஞ்சள் மூடைகள் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்ட்டுவருகின்றது.

 குறித்த மஞ்சள் இந்தியாவில் இருந்து கடத்தல் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. மேலும் பேசாலை பொலிசாரினால் ஒரு மாதத்தில் 3 மஞ்சள் கடத்தல் சம்பவங்கள் பிடிக்கப்பட்டு உள்ளதாக பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தமிந்த சோமஜித் தெரிவித்தார்.

மன்னார் பெரிய கரிசல் பகுதியில் வாகனத்தில் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் 1024 கிலோ மஞ்சள் கட்டி மூடைகள் மீட்பு. Reviewed by Author on September 27, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.