வவுனியா வாள் வெட்டு சம்பவத்தில் காயமடைந்திருந்தவர் உயிரிழப்பு
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததுடன், கடந்த இரண்டு நாட்களாக வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்றையதினம் அவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் முல்லைத்தீவு- கரிப்பட்ட முறிப்பு பகுதியைசேர்ந்த சுப்பிரமணியம் சிவாகரன் என்பவரே இன்று உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் மாணிக்கர் வளவு கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவரான கோபால் குகதாசன் (40 வயது) மற்றும் முல்லைத்தீவு கரிப்பட்ட முறிப்பை சேர்ந்த சிவனு மகேந்திரன்(34 வயது) ஆகிய இருவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் மாணிக்கர் வளவில் வசித்துவரும் ஒருவர் ஓமந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா வாள் வெட்டு சம்பவத்தில் காயமடைந்திருந்தவர் உயிரிழப்பு
Reviewed by Author
on
October 20, 2020
Rating:

No comments:
Post a Comment