பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை என்பன நடத்தப்படவுள்ளன.
இந்நிலையில், பரீட்சை மத்திய நிலையங்களைப் பயன்படுத்தும் முறைமை தொடர்பாக கல்வி அமைச்சில் இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, பரீட்சை நடவடிக்கைகளுக்காக பொலிஸார் மற்றும் போக்குவரத்துத் துறையின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்த ஆராயப்பட்டுள்ளது.
மேலும், ஊரடங்குச் சட்டம் அமுலபடுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக, அந்தப் பகுதிகளை அண்மித்த இடங்களில் பரீட்சை மத்திய நிலையங்களை ஏற்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, மாணவர்களை பரீட்சை மத்திய நிலையங்களுக்கு அனுமதிப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளும் முறைமை குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
Reviewed by Author
on
October 10, 2020
Rating:

No comments:
Post a Comment