அண்மைய செய்திகள்

recent
-

பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு கொரோனா

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து குறித்த பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் விடுதிகளில் உள்ள மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 சுமார் 50 மாணவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் சுதந்த லியனகே தெரிவித்தார். முகாமைத்துவ பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த மாணவர் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 குறித்த மாணவர் தற்போதைய ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவர் வெயாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த மற்றுமொரு மாணவருடன் தங்கியிருந்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், குறித்த மாணவரும் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக துணை வேந்தர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு கொரோனா Reviewed by Author on October 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.