அண்மைய செய்திகள்

recent
-

துணுக்காய் கல்வி வலயத்தில் 72 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு வெளியாகியுள்ள 2020ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்தில் 72 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு(160) மேற்பட்ட புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளதாக துணுக்காய் வலயக்கல்வி ஆரம்பப்பிரிவு உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார். 

 குறித்த கல்வி வலயத்தின் சித்தி அடைவு மட்டம் குறித்து மேலும் தெரிவிக்கையில்: 2020ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு துணுக்காய் கல்வி வலயத்தில் 708 மாணவர்கள் தமிழ் மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில், நேற்று முன்தினம் வெளியான பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 72 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளனர். 

 இதனடிப்படையில் துணுக்காய் கல்வி வலயத்தின் ஒட்டிசுட்டான் கோட்டத்தில் 315 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில், 20 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்னர். 

 மாந்தை கிழக்கு கோட்டத்தில் 162 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில், 18 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்னர். துணுக்காய் கோட்டத்தில் 231 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில், 34 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்னர் எனத் தெரிவித்தார்.

 மயில்வாகனம் வித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் கி.அக்ஷயன்191புள்ளிகள் குறித்த வலயத்தின் அதிகூடிய பெறுபேறாக அமைந்துள்ளது. கடந்த வருடம் துணுக்காய் கல்வி வலயத்தில் 638மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 54 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

துணுக்காய் கல்வி வலயத்தில் 72 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர். Reviewed by Author on November 17, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.