துணுக்காய் கல்வி வலயத்தில் 72 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
குறித்த கல்வி வலயத்தின் சித்தி அடைவு மட்டம் குறித்து மேலும் தெரிவிக்கையில்:
2020ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு துணுக்காய் கல்வி வலயத்தில் 708 மாணவர்கள் தமிழ் மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில், நேற்று முன்தினம் வெளியான பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 72 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளனர்.
இதனடிப்படையில் துணுக்காய் கல்வி வலயத்தின் ஒட்டிசுட்டான் கோட்டத்தில் 315 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில், 20 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்னர்.
மாந்தை கிழக்கு கோட்டத்தில் 162 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில், 18 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்னர்.
துணுக்காய் கோட்டத்தில் 231 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில், 34 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்னர் எனத் தெரிவித்தார்.
மயில்வாகனம் வித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் கி.அக்ஷயன்191புள்ளிகள் குறித்த வலயத்தின் அதிகூடிய பெறுபேறாக அமைந்துள்ளது.
கடந்த வருடம் துணுக்காய் கல்வி வலயத்தில் 638மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 54 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
துணுக்காய் கல்வி வலயத்தில் 72 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
Reviewed by Author
on
November 17, 2020
Rating:

No comments:
Post a Comment