அண்மைய செய்திகள்

recent
-

ஐயங்கன்குளம் மகாவித்தியாலயத்தில் மூன்று மாணவர்கள் சித்தி! குவியும் வாழ்த்துக்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட ஐயங்கன்குளம் மகாவித்தியாலயத்தில் மூன்று மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு(160) மேற்பட்ட புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளமையை பாராட்டும் விடயம் சமூக வலைத்தளங்களில் அதிகம் காணமுடிகிறது.

 நேற்று முன்தினம்(15) நள்ளிரவு வெளியான 2020ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சையில் குறித்த பாடசாலையின் மாணவர்களான ஆ. கிருத்திகா, சு. டிஷான், கி. ஜெர்சன் ஆகிய மாணவர்களே வெட்டுப் புள்ளிகளை தாண்டி சித்தியடைந்துள்ளனர். இந் நிலையில் சித்தி அடைந்த மாணவர்கள் மற்றும் மாணவர்களை வழிப்படுத்திய ஆசிரியருக்கான வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக காணமுடிகிறது.


ஐயங்கன்குளம் மகாவித்தியாலயத்தில் மூன்று மாணவர்கள் சித்தி! குவியும் வாழ்த்துக்கள்! Reviewed by Author on November 17, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.