யாழில் கடும் மழை மற்றும் காற்றினால் 300பேர் பாதிப்பு!
மேலும், தற்போது நிலைகொண்டுள்ள தாழமுக்கத்தினால் கடலானது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் 80 தொடக்கம் 100 கிலோமீற்றர் வேகத்தில் காற்றுவீசும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், யாழ். மாவட்டத்தில் மீன்பிடித் தொழிலுக்குச் செல்பவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் கரையோரப் பகுதி மக்களை விழிப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் கணிசமான மழைவீழ்ச்சி கிடைத்துள்ளதாகவும் எனினும், இதுவரையில் சூறாவளிப் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் கடும் மழை மற்றும் காற்றினால் 300பேர் பாதிப்பு!
Reviewed by Author
on
November 25, 2020
Rating:
Reviewed by Author
on
November 25, 2020
Rating:


No comments:
Post a Comment