மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி - ஒருவர் மாயம்
அம்பிளாந்துறை-வெல்லாவெளி வீதியில் தாமரைப்பூசந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றபோது வேகத்தினை கட்டுப்படுத்தமுடியாமல் மின்சார தூணில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது குறித்த நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதேநேரம் குறித்த நபருடன் இன்னுமொருவர் பயணித்துள்ளதாகவும் விபத்து நடைபெற்ற நிலையில் குறித்த நபர் காணாமல்போயுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி - ஒருவர் மாயம்
Reviewed by Author
on
November 14, 2020
Rating:

No comments:
Post a Comment