அண்மைய செய்திகள்

recent
-

வரலாற்றில் முதன்முறையாக சாதனை படைத்த யாழ்.அச்செழு மெதடிஸ் மிஷன் பாடசாலை மாணவர்கள்!

நடைபெற்று முடிந்த 2020ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்.அச்செழு மெதடிஸ் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் நான்கு மாணவர்கள் கூடிய புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர். குறித்த பரீட்சைக்கு எட்டு மாணவர்கள் தோற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வெட்டுப்புள்ளி 160 ஆக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி சித்தியடைந்த மாணவர்களின் விபரம், 1. சத்தியநாதன் சஷ்வினி 170 2. விஷ்ணுகரன் மகிழினி 166 3. சுவேந்திரன் கோபிகா 164 4. நாகராசன் கவின்சன் 164 அத்துடன் மற்றைய நான்கு மாணவர்களும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர் எனவும் பாடசாலையின் அதிபர் திரு க.குகதாசன் தெரிவித்துள்ளார். 

 வறுமைக் கோட்டுக்குட்பட்ட அன்றாடம் கூலித்தொழில் செய்து வாழும் குடும்பங்களைச் சேர்ந்த இம் மாணவர்களின் விடாமுயற்சி இன்று வெற்றியளித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை குறித்த பாடசாலையில் எந்த மாணவர்களும் 5ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையவில்லை எனினும் இம்முறை நான்கு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.






வரலாற்றில் முதன்முறையாக சாதனை படைத்த யாழ்.அச்செழு மெதடிஸ் மிஷன் பாடசாலை மாணவர்கள்! Reviewed by Author on November 16, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.