அண்மைய செய்திகள்

recent
-

குடும்ப பெண் நடத்திய தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு: முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவு- முள்ளியவளை முறிப்பு கிராமத்தில் பால்பண்ணை பகுதியில் குடும்ப பெண் ஒருவர் நடத்திய தாக்குதலில், இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான ஜெ.நிரோசன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

 மேலும், இந்த சம்பவம் தொடர்புடைய குடும்ப பெண், முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அத்துடன், தாக்குதலில் உயிரிழந்த குடும்பஸ்தரின் உடல், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தலையில் இரண்டு வெட்டுக்காயங்கள் காணப்படுவதால் பிரேத பரிசோதனையின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இந்நிலையில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

குடும்ப பெண் நடத்திய தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு: முல்லைத்தீவில் சம்பவம் Reviewed by Author on November 20, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.