அண்மைய செய்திகள்

  
-

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்

நாட்டின் சமகால பிரச்சனைக்கு மத்தியிலும் உத்வேகத்துடனும் கல்விப் பயணத்தில் பயணித்து தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வ்னனி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். -அவர் இன்று (16) விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,,,, -தற்போது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் வெளியாகி உள்ளது.

 பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேலான புள்ளிகளை பெற்று சித்தியடைந்த மற்றும் சாதாரணமாக சித்தியடைந்த மாணவர்களையும் வாழ்த்தி பாராட்டுகிண்றேன். இவர்களுடைய வெற்றிக்கு பக்க பலமாக இருந்த ஆசிரியர்கள், கல்வி சார் அதிகாரிகள் , சிறப்பாக வலயகல்வி பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர் ஆகியோரை நன்றியுடன் நினைவு கூர்ந்து வாழ்த்துகின்றேன்.

 'காலத்தால் அழியாத கல்விச் செல்வத்தை' வளர்த்தெடுத்து எமது வன்னி மாவட்டத்தின் எதிர் கால சிப்பிகளை உருவாக்கி தருகின்ற தளராத பணி சிறக்க இறைவனை பிராத்திக்கின்றேன் . தொடரும் கல்விப் பயணத்தில் இதே உத்வேகத்துடன் பயணிக்க ஆசிரியர்களாகிய உங்களுக்கும் மாணவர்களுக்கும் எனது நல் வாழ்த்துக்களையும் கூறுவதோடு இறையாசிரையும் வேண்டி நிற்கின்றேன்.என குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்கள் Reviewed by Author on November 16, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.