"மன்னாரில் பெய்யும் ஒவ்வொரு மழைத்துளியும் குளங்களை நிறைத்த பின்னரே கடலை சேரவேண்டும்"
இதன் முதுகெலும்பாக செயற்பட்டு வரும் மன்னார் பிரதேச செயலாளருக்கும், முழு ஒத்துழைப்பை வழங்கிவரும் கமநலதிணைக்கள தலைவருக்கும், நகரசபைக்கும், அத்துமீறிய நில ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவிய ஊர் மக்களுக்கும் எமது நன்றிகள். 60 வீதமான வேலைகள் முடிவடைந்திருந்தாலும் மீதி இருக்கும் 40 வீதமான வேலைகளான,
1) தோண்டப்படும் வாய்க்காலின் அருகிலுள்ள ஊர்களினூடு சிறிய உபகால்வாய்களை அமைத்து ஊருக்குள் பெய்யும் மழைநீரை கால்வாய்களுக்குள் கொண்டு சேர்ப்பது,
2) பராமரிப்பற்று கிடக்கும் கதவுகளை சீரமைத்து கடல் நீர் உட்புக விடாமல் தடுப்பது என இவ்விரு வேலைகளையும்
மழைக்குமுன் செய்து முடிப்பதில் தான் இந்த திட்டத்தின் முழு வெற்றி தங்கியுள்ளது.
எனவே, அதற்கு மக்களினதும் நகர சபையினதும் பூரண ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம்.
மன்னார் பொறியாளர் சம்மேளனம்
"மன்னாரில் பெய்யும் ஒவ்வொரு மழைத்துளியும் குளங்களை நிறைத்த பின்னரே கடலை சேரவேண்டும்"
Reviewed by Author
on
November 09, 2020
Rating:

No comments:
Post a Comment