அண்மைய செய்திகள்

recent
-

ரிஷாட் பதியுதீனின் சாரதி ஒருவர் பிணையில் விடுதலை..!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மகிழுந்தில் இருந்து இரண்டு துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவரது இரண்டு சாரதிகளில் ஒருவர் 5 லட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

 அவர்கள் இருவரும் கோட்டை நீதவான் பிரியந்த லியனகேவிடம் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 கடந்த 13 ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே இந்த உத்தரவை பிறப்பித்தார். கொரோனா பரவல் நிலை காரணமாக அவர் அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களர்களை பேருந்தில் அழைத்து சென்று தேர்தலை சட்டத்தை மீறி பொது சொத்தை பயன்படுத்தியதாக தெரிவித்து சட்டமா அதிபரினால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரிஷாட் பதியுதீனின் சாரதி ஒருவர் பிணையில் விடுதலை..! Reviewed by Author on November 19, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.