அண்மைய செய்திகள்

recent
-

பாணந்துறை கடற்கரையில் கரையொதுங்கிய திமிங்கிலங்கள்

பாணந்துறை கடற்கரையில் நேற்று சுமார் 100திமிங்கிலங்கள் கரையொதுங்கிய நிலையில், மீண்டும் அவைகள் கடலுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. வளிமண்டலவியல் மாற்றம் காரணமாக பாணந்துறை கடற்கரையில் நேற்று சுமார் 100 திமிங்கிலங்கள் கரையொதுங்கியுள்ளன. இவ்வாறு கரையொதுங்கியுள்ள திமிங்கிலங்கள் 10 முதல் 25 அடி நீளமுடையவை என்று கூறப்பட்டுள்ளது.

 திமிங்கிலங்கள் இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளதாக செய்திகள் வெளியானதை அடுத்து, தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும் திமிங்கலங்களை பார்வையிட மக்கள் கடற்கரையில் கூடினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கரையொதுங்க திமிங்கிலங்கள் பொலிஸார் மற்றும் இலங்கை கடலோர காவல்படையினரின் உதவியுடன் மீண்டும் கடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாணந்துறை கடற்கரையில் கரையொதுங்கிய திமிங்கிலங்கள் Reviewed by Author on November 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.