கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம்!
அவரது உணவகத்தின் உரிமையாளருக்கு கொரோனா தோற்று உள்ளமை கடந்த வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றிய ஊழியருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 28ஆம் திகதி கிளிநொச்சி திரும்பிய அவர், சுய தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரியின் சாதூரியமான செயற்பாட்டால் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரது உறவினர் ஒருவர் பிரதேச செயலகத்தில் பணியாற்றுகின்றார்.
இந்நிலையில், அவர் கடந்த மூன்று தினங்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்பதுடன் கடந்த செவ்வாய்கிழமை வீட்டிற்குச் சென்று அலுவலகத்திற்கும் வந்து சென்றுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம்!
Reviewed by Author
on
November 02, 2020
Rating:

No comments:
Post a Comment