மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விதைப்பொதிகள் வழங்கி வைப்பு
மன்னார் நகர பிரதேசச் செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் கலந்து கொண்டு முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு விதைப்பொதிகளை வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வில் மன்னார் நகர பிரதேச செயலாளர் எம். பிரதீப் மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி. சகீலா பானு , பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விதைப்பொதிகள் வழங்கி வைப்பு
Reviewed by Author
on
December 17, 2020
Rating:

No comments:
Post a Comment