மஹர சிறைச்சாலை அமைதியின்மை; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு
இதேவேளை, மஹர சிறைச்சாலையின் பாதுகாப்பு இன்றும் பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் கைதிகளின் உறவினர்கள் இன்று சிறைச்சாலை வளாகத்தில் குழுமினர்.
மஹர சிறைச்சாலையிலிருந்து இன்று மாலையும் அம்பியூலன்கள் சில சென்றமையை அவதானிக்க முடிந்ததாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார்.
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற அமைதியின்மைக்கு முன்னதாக மன நோயாளர்கள் பயன்படுத்தக்கூடிய 21,000 மருந்து வில்லைகளை கைதிகள் பயன்படுத்தியுள்ளமை தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
இதனிடையே மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் விசாரணை செய்ய குசலா சரோஜினி வீரவர்தனவின் தலைமையில் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவிலிருந்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இராஜினாமா செய்துள்ளார்.
மஹர சிறைச்சாலை அமைதியின்மை; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு
Reviewed by Author
on
December 01, 2020
Rating:

No comments:
Post a Comment