அண்மைய செய்திகள்

recent
-

மீனவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

மீன்பிடித்தல் மற்றும் கடல் நடவடிக்கைகளுக்காகக் இன்று மாலை வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டல வியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று மாலை வரை புத்தளம் முதல் மன்னார் மற்றும் காங்கேசன் துறை வழியாக முல்லைத்தீவு வரை ஆழ மான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் மீன்பிடித்தல் மற்றும் கடல் நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டல வியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

 மன்னார் வளைகுடா கடல் பிரதேசத்தில் நிலைகொண் டிருந்த ஆழமான தாழமுக்கமானது தற்போதைய நிலையில் ஒரு குறைந்த தாழமுக்கமாக வலுவிழந்து மன்னாருக்கு மேற்குத் திசையில் ஏறத்தாழ 145 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ளது என தெரிவித்துள்ளது. இதன்காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் இன்று 100 மி.மீ வரை பலத்த மழை பெய்யும் என்று வளிமண்டல வியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மீனவர்களுக்கு முக்கிய அறிவித்தல்! Reviewed by Author on December 05, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.