நந்திக்கடலில் காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
இந்நிலையில் நேற்று (03) காலை 10.00 மணிக்கு குறித்த வள்ளத்தை கரைக்கு கொண்டு வருவதற்காக தனது சகோதரனுடன் பிறிதொரு வள்ளத்தில் சென்று காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தில் ஏறியபோது குறித்த வள்ளத்துடன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் அவரை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.கேப்பாபுலவு மாதிரிக் கிராமத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளில் தந்தையான 26 வயதுடைய ஜெயசீலன் சிலக்சன் என்பவரே காணாமல் போயிருந்தார்.
சம்பவத்தை தொடர்ந்து கடற்படையினர் இராணுவத்தினர் மீனவர்கள் இணைந்து நந்திக்கடல் களப்பில் குறித்த மீனவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை காணமல் போயிருந்த மீனவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நந்திக்கடலில் காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
Reviewed by Author
on
December 04, 2020
Rating:

No comments:
Post a Comment