மட்டக்களப்பில் கொரோனா நோயாளி உயிரிழப்பு:குறித்த பகுதி அவசரமாக முடக்கம்!
இதனை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
குறித்த நபர் சுகயீனம் காரணமாக வீட்டிலேயே நேற்று வெள்ளிக்கிழமை இரவு மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து உயிரிழந்தவர் மீது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, குறித்த நபரின் சடலத்தினை அங்கிருந்து வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லவதற்கான நடவடிக்கையினை பொது சுகாதார ஊழியர்கள் மேற்கொண்டுவருவதுடன், அந்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலத்தை பார்க்க சென்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் கொரோனா நோயாளி உயிரிழப்பு:குறித்த பகுதி அவசரமாக முடக்கம்!
Reviewed by Author
on
January 16, 2021
Rating:

No comments:
Post a Comment