மன்னார் பஸார் பகுதியில் உள்ள 'வன் மினிற்' ஆடை விற்பனை நிலையத்தில் கடமையாற்றுபவருக்கு கொரோனா தொற்று உறுதி.
முதல் கட்டமாக கிடைக்கப்பெற்ற பரிசோதனை அறிக்கையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
மன்னார் பஸார் பகுதியில் உள்ள 'வன் மினிற்' ஆடை விற்பனை நிலையத்தில் கடமையாற்றும் ஒருவருக்கே தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தற்போது சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 7 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை குறித்த ஆடை விற்பனை நிலையத்திற்குச் சென்று மிகவும் நெருக்கமாக நடந்து கொண்ட வாடிக்கையாளர்கள், நண்பர்கள் உடனடியாக தமது பிரதேசத்தில் உள்ள பொது சுகாதார வைத்திய அதிகாரி அல்லது பொது சுகாதார பரிசோதகர்களை தொடர்பு கொண்டு தங்களின் விபரங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.
தொடர்பு கொண்டு விபரங்களை பதிவு செய்வதன் ஊடக பீ.சி.ஆர்.பரிசோதனைகளை முன்னெடுக்க முடியும். இதனால் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்திக்கொள்ள முடியும். என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் பஸார் பகுதியில் உள்ள 'வன் மினிற்' ஆடை விற்பனை நிலையத்தில் கடமையாற்றுபவருக்கு கொரோனா தொற்று உறுதி.
Reviewed by Author
on
January 17, 2021
Rating:

No comments:
Post a Comment